search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர்களை தாக்க முயன்ற சகோதரர்கள் கைது"

    திருமங்கலம் அருகே வாகன சோதனையின்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் போலீஸ்காரர்களை தாக்க முயன்ற சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    மோட்டார் சைக்கிளை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து போலீசார் இதை மட்டுமே பணியாக நினைத்து தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில போலீசாரின் விரும்பாதகாத செயல்களால் பொதுமக்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், முதன்மை காவலர் அழகர்சாமி மற்றும் போலீசார் எலியார்பத்தி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாரபத்தியை சேர்ந்த முத்தையா மகன்கள் முருகன் (வயது38), மணி ஆகியோரை போலீசார் மறித்தனர். பின்னர் ஹெல்மெட் அணியாதது குறித்தும், ஆவணங்கள் குறித்தும் போலீசார் கேட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர்களை தாக்க முயன்றதாக கூடக்கோவில் போலீசில் சகோதரர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனையும், அவரது தம்பி மணியையும் கைது செய்தனர்.

    ×